மதுரைமாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வரும் பிப்.16 -இல் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் விவசாயம் தொடர்புடைய அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆகவே, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இக் கூட்டத்தில் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய பிரச்னைகளைக் கூறிப் பயன்பெறலாம்.