விவசாயிகளுக்கு ஆதரவாக வாடிப்பட்டி, அலங்காநல்லூர் பகுதிகளில் பிப்ரவரி 14-இல் (புதன்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தின் இருபோக பகுதிக்கு தண்ணீர் திறக்கக் கோரி பெரியாறு பாசன விவசாயிகள், வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதில் வாடிப்பட்டி, மதுரை வடக்கு, மதுரை கிழக்கு வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக வாடிப்பட்டி, அலங்காநல்லூர் பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை
அடைக்க முடிவு செய்துள்ளனர்.