திருமங்கலத்தில் பிப். 17 -இல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

திருமங்கலத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சனிக்கிழமை (பிப்.17) சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 

திருமங்கலத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சனிக்கிழமை (பிப்.17) சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாவட்ட நிர்வாகமும், வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகின்றன. வரும் சனிக்கிழமை (பிப்.17) காலை 10 மணி முதல் திருமங்கலத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முகாம் நடைபெறவுள்ளது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகிக்கிறார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். முகாமில் 70-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.
முகாமில் பங்கேற்க விரும்பும், தனியார் நிறுவனங்கள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்தோ அல்லது 0452-2566022 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரையிலும், பட்டயப்படிப்பு (டிப்ளமோ) மற்றும் ஐ.ஐ.டி. முடித்தவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com