மதுரை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்

மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.16) அம்மா திட்ட முகாம் நடைபெறும் ஊர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.16) அம்மா திட்ட முகாம் நடைபெறும் ஊர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  வரும் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. 
 முகாம் நடைபெறும் வட்டம் மற்றும் கிராமத்தின் பெயர்கள் வருமாறு:  மேலூர் உறங்கான்பட்டி, உசிலம்பட்டி நல்லுதேவன்பட்டி, மதுரை கிழக்கு திருக்காணை, வாடிப்பட்டி சத்திரவெள்ளாளபட்டி, திருமங்கலம் அலப்பலசேரி, மதுரை வடக்குபொதும்பு பிட் 2, பேரையூர் சீலநாயக்கன்பட்டி,  மதுரை தெற்கு கிழக்கு மதுரை, மதுரை மேற்கு தட்டானூர், திருப்பரங்குன்றம் தொட்டியபட்டி. 
முகாம் நடைபெறும் இடங்களில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com