கார் கண்ணாடியை உடைத்து மடிக்கணினி திருட்டு

மதுரையில் தனியார் தொலை தொடர்பு நிறுவன மேலாளர் கார் கண்ணாடியை உடைத்து மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் தனியார் தொலை தொடர்பு நிறுவன மேலாளர் கார் கண்ணாடியை உடைத்து மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழ உரப்பனூரைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(32). தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். பணி நிமித்தமாக மதுரை காளவாசலுக்கு வியாழக்கிழமை காரில் வந்த செல்வக்குமார் அங்கு காரை நிறுத்தி விட்டு சிறிதுநேரம் கழித்து திரும்பி வந்துபார்த்தபோது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் இருந்த மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. கரிமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com