கொட்டாம்பட்டி அருகே  டிராக்டர் மீது கார் மோதல்: 3 பேர் சாவு

கொட்டாம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை டிராக்டர் மீது கார் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

கொட்டாம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை டிராக்டர் மீது கார் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கரும்பு ஏற்றி கொண்டு டிராக்டர் ஒன்று வந்து கொண்டிருந்தது. டிராக்டரில் 3 பெண்கள், 2 ஆண்கள் என ஐந்து பேர் வந்தனர். டிராக்டரை எம்.வல்லாளபட்டியைச் சேர்ந்த ராஜா என்ற வெள்ளைப்பெருமாள் (32) ஓட்டி வந்தார். 
அப்போது திருச்சியிலிருந்து மதுரை நோக்கி வந்த கார் டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டர் ஓட்டுநர் ராஜா, கார் ஓட்டுநர் மதுரை செல்லூரைச் சேர்ந்த அசோக் (25), மேலும் காரில் வந்த பேச்சியம்மாள் (45) ஆகியோர் உயிரிழந்தனர். 
மேலும் காயமடைந்த ராமு (38), பிச்சம்மாள் (52), ராமாயி (45), செக்காணூரணியை சேர்ந்த மோகன் (50) ஆகியோர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மோகன் தனது உறவினர்களுடன் சமயபுரம் கோயிலுக்குச் சென்று விட்டு மதுரை திரும்பிய போது இவ்விபத்து நேரிட்டதாக தெரிகிறது. விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com