சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி , மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி , மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
 சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.  மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய இளைஞர் தின விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். 
விவேகானந்தர் சிலைக்கு  நேதாஜி தேசிய இயக்கத்தின் நிறுவனர் வே.சுவாமிநாதன்,  கரு. தங்கவேல், மக்கள் சக்தி இயக்க தென்மண்டலப் பொதுச் செயலர் ஏ.வி.பிரபாகர், ஜேசிஐ மதுரை எக்ùஸல் அமைப்பு பட்டயத் தலைவர் எம்.எஸ்.ரத்தீஸ்பாபு, தலைவர் ராதாகிருஷ்ணன், காந்திய ஆராய்ச்சியாளர் தேவதாஸ், வழக்குரைஞர் அழகுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில், சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா நற்பணி மன்ற அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மன்றச் செயலர் மலரகம் சந்திரன் தலைமை வகித்தார். வலிமையும் எளிமையும் என்ற தலைப்பில் மன்றத்தின் தலைவர் ரா.சொக்கலிங்கம் சிறப்புரையாற்றினார்.
மன்ற நிர்வாகிகள் மு.முருகசேன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, விசு.சொக்கலிங்கம், ப.தங்கமணி, என்.மகேந்திரராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com