ஜன.18-இல் கல்விக் கடன் முகாம்

கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்காக ஜனவரி 18-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்காக ஜனவரி 18-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
மதுரை ஞானஒளிவுபுரம் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த முகாமில் பல்வேறு வங்கிகளின் மேலாளர்கள், அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.
  கல்விக் கடன் தேவையுள்ள மாணவர்கள் 10 ஆம் வகுப்பு சான்றிதழ், 12-ஆம் வகுப்பு சான்றிதழ், கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கான சான்று, சாதிச்சான்று, வருமான சான்று, கல்லூரியில் செலுத்த வேண்டிய ஓராண்டுக்கான கட்டணப் பட்டியல்,  பான்கார்டு, உறவினர் மற்றும் அறிமுகமான நபர்கள் இருவரிடம் பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று, பள்ளி மாற்றுச் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
     மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந.மாரிமுத்து இத்தகவலைத் தெரிவித்து உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com