பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்டக்கோரி தமிழ்நாடு தென்இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்டக்கோரி தமிழ்நாடு தென்இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தொண்டரணி செயலர் டி.எஸ்.மதிமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் தேவர், மாவட்ட தலைவர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் இணை அமைப்பாளர் கார்த்திக் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மதுரை விமான நிலையத்திற்கு தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரை சூட்ட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com