விடுதலை சிறுத்தைகள் உண்ணாவிரதம்

மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்டக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது. 

மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்டக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது. 
அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே  மதுரை தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடை பெற்ற உண்ணாவிரதத்திற்கு  மாவட்ட செயலர் இன்குலாப் தலைமை வகித்தார். 
உண்ணாவிரதத்தில் மதுரை விமானநிலையம் அமைய இடம் கொடுத்த சின்னஉடைப்பு, பெருங்குடி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தியாகி இமானுவேல் சேகரன் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும்  உள்ளிட்ட  கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com