அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 924 காளைகளும், மாடுபிடி வீரர்கள் 624 பேர் பதிவு செய்துள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 924 காளைகளும், 624 மாடுபிடி வீரர்களும் தங்களது பெயர்களை சனிக்கிழமை பதிவு செய்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை போட்டியை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் துவக்கி வைக்கவுள்ளனர். போட்டிகளில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு காலை 6 மணி முதலே மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது. 10-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர் காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்ய உள்ளனர். மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவப் பரிசோதனையை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.