கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடியில் உள்ள சந்திவீரன்கோயில் காளை வெள்ளிக்கிழமை இரவு இறந்தது. இறந்த காளையின் உடலுக்கு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
கருங்காலக்குடி கோயில் காளை ஏராளமான ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இந்த காளை வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தது.
இதையறிந்த கருங்காலக்குடி கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து காளைக்கு வேட்டி, துண்டு, மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சனிக்கிழமை காளையின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.