மதுரை மாவட்ட ஆயுதப்படைக் காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கான மலிவு விலை சிற்றுண்டிக் கூடத்தை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மதுரை ஆயுதப்படை காவலர்களுக்கு சிற்றுண்டிக்கூடம் இதுவரை இல்லாமல் இருந்தது. இதையடுத்து ஊரகக்காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலை சிற்றுண்டிக் கூடத்தை அமைக்க உத்தரவிட்டார். இப்பணிகள் நிறைவுற்றதையடுத்து, சிற்றுண்டிக் கூடத்தை காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் திங்கள்கிழமை திறந்து வைத்தார். இவ்விழாவில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் நரசிம்மவர்மன், வனிதா, துணை காவல் கண்காணிப்பாளர் முருகன், ஆய்வாளர்கள், ஆயுதப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.