கரிசல்குளம் பகுதியில் ஜூலை 18 மின்தடை

மதுரை கரிசல்குளம் பகுதியில் புதன்கிழமை (ஜூலை 18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை கரிசல்குளம் பகுதியில் புதன்கிழமை (ஜூலை 18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பெருநகர் அரசரடி செற்பொறியாளர் எம்.ராஜாகாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
மதுரை ஆனையூர் (இருப்பு கூடல்நகர்) உப மின் நிலையத்தில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
இதன் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள்: தினமணி நகர், கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சி நகர், பாண்டியன் நகர், ஐஓசி நகர், விஎம்டபிள்யூ காலனி, ரயிலார் நகர், சங்கீத் நகர், சொக்கலிங்க நகர், கூடல்நகர் 1 முதல் 13 தெருக்கள் வரையிலான பகுதிகள்.
அகில இந்திய வானொலி நிலையப் பகுதி, செல்லையா நகர் பகுதி முழுவதும், ஆனையூர் செக்டார் 1 மற்றும் 2 பகுதிகள், ஜே.ஜே.நகர், சஞ்சீவி நகர், சாந்தி நகர், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாக்குடி பிரிவு, சிக்கந்தர் சாவடி, பூதகுடி, லெட்சுமிபுரம், மிளகரணை, கூடல்புதூர் ரயில்வே பாலம் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை ஏற்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. 
திருமங்கலம் கோட்டத்தில் இன்று குறைதீர் கூட்டம்: மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் ஜா.பிரீடாபத்மினி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  திருமங்கலம் கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 17) திருமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர் பங்கேற்று, தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com