திருநகர் ஆனந்த விநாயகர் கோயில் 17 ஆம்ஆண்டு பிரதிஷ்டை விழா மற்றும் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. முன்னதாக மாலை சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. ஆனந்த விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மழை வேண்டி சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன.