பூங்கா முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை

மதுரை பூங்கா முருகன்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை பூங்கா முருகன்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரை ராஜாஜி பூங்கா அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்கா முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் உண்டியல்கள் எண்ணிக்கை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் தலைமையில் நடைபெற்றது.  கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
 உண்டியல்களில் ரூ.3.09 லட்சம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.  உண்டியல் எண்ணும் பணியின்போது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, வடக்கு ஆய்வாளர் சுந்தரி, உதவி ஆணையர் (வருவாய்) ரங்கராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com