மதுரை தெற்குவாசல் நாடார் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்றநிகழ்ச்சியில் நகர சுகாதாரத்துறைச் செவிலியர் சுப்புலட்சுமி மற்றும் பகுதி சுகாதாரத்துறைச் செவிலியர் சர்மிளா தேவி ஆகியோர் பங்கேற்று டெங்கு நோய் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.
முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு) கே.அமுதா, பள்ளிச் செயலர் பி.எஸ்.குணசேகரன், பள்ளிக் குழுமத் தலைவர் எஸ்.ஆர்.பார்த்திபன், தலைமையாசிரியர் டி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.