மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வீட்டில் தனியாக இருந்த நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வீட்டில் தனியாக இருந்த நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
    திருமங்கலம் கூளையாபுரத்தைச் சேர்ந்த 17 வயது நர்சிங் மாணவி வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்தாராம். அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் மலைராஜ் (25) வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்து மாணவி அளித்தப் புகாரின்பேரில் திருமங்கலம் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின்கீழ் மலைராஜை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com