அவனியாபுரம் முத்துமாரியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடிச்சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை அவனியாபுரத்தை அடுத்து உள்ள பர்மா காலனியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு கோயில் நடையை பூசாரி சாத்திச் சென்றுவிட்டார். வெள்ளிக்கிழமை காலையில் வந்து பார்த்தபோது கோயில் கதவை உடைத்து மர்ம நபர்கள் கோயிலில் இருந்த 2.5 பவுன் நகை, குத்துவிளக்கு, மணி மற்றும் 2 உண்டியல்களை உடைத்து அதிலிருந்த
சுமார் ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.இதுகுறித்தப் புகாரின்பேரில் அவனியாபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மாநகராட்சி வரிவசூல் மையத்தில் திருட்டு: அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி வருவசூல் மையம் உள்ளது. இங்கு 59,60,61,94 ஆகிய வார்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளின் வீட்டு வரி வசூலிக்கப்படுகிறது. இங்கு வியாழக்கிழமை இரவு நுழைந்த மர்ம நபர்கள் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள் யு.பி.எஸ். மின் சாதனம் மற்றும் பேட்டரிகளைத் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்தப் புகாரின்பேரில் அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.