கோ.புதூரில் உள்ள மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (செப். 15) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
மதுரை மின்பகிர்மான எல்லைக்கு உட்பட்ட மதுரை கிழக்கு, சமயநல்லூர், திருமங்கலம், உசிலம்பட்டி கோட்டங்களைச் சேர்ந்த மின்நுகர்வோர் இக் கூட்டத்தில் தங்களது குறைகளை நேரடியாகத் தெரிவிக்கலாம்.
மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாரளர் ஜா.பிரீடா பத்மினி இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.