காவல் ஆணையர் அலுவலகத்தில்  2 காதல் ஜோடிகள் தஞ்சம்

மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில்  பாதுகாப்புக்கோரி 2 காதல் ஜோடிகள் வெள்ளிக்கிழமை தஞ்சமடைந்தனர். 

மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில்  பாதுகாப்புக்கோரி 2 காதல் ஜோடிகள் வெள்ளிக்கிழமை தஞ்சமடைந்தனர். 
    சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தீபா, சுரேஷ் இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் தங்களின் திருமணத்தைப் பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து தங்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாகவும் பாதுகாப்புக்கோரியும் மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 
இதேபோல கேரள மாநிலம் வண்டிப்பெரியாறு செங்கரையைச் சேர்ந்த இந்து மற்றும் பாண்டித்துரை ஆகியாரின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மதுரை மாவட்டம் புதுப்பட்டியில் இருவரும் சில நாள்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அவர்கள்  தங்கள் பெற்றோர் தேடி வருவதால் பாதுகாப்பு வழங்குமாறு மாநகரக்காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இவர்களிடன் மனு தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com