திருப்பரங்குன்றத்தில் பள்ளி மாணவர்கள் தூய்மைப் பணி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்த மயி பள்ளி மாணவ, மாணவியர் திருப்பரங்குன்றம் நகர் பகுதியை சனிக்கிழமை சுத்தப்படுத்தி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்த மயி பள்ளி மாணவ, மாணவியர் திருப்பரங்குன்றம் நகர் பகுதியை சனிக்கிழமை சுத்தப்படுத்தி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி முதல்வர் மகேஷ்குமார் தலைமையில், தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இதில், திருப்பரங்குன்றம் கோயில் வாசல், 16 கால் மண்டபம், பெரியரத வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சன்னதி தெரு பகுதியில் தூய்மை இந்தியாவை உருவாக்குவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள், சுற்றுப்புறத்தின் தூய்மை காப்போம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
நிகழ்ச்சியில், மதுரை, திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்த மயி பள்ளி மாணர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com