திருமங்கலத்தில் செப்.18- இல் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் செப்டம்பர் 18 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் செப்டம்பர் 18 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக மதுரை மின்பகிர்மான மேற்பார்வையாளர் ஜா. பிரீடா பத்மினி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
திருமங்கலம் கோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம், திருமங்கலம் செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. மதுரை மின்பகிர்மான மேற்பார்வையாளர் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில், மின்நுகர்வோர்கள் அனைவரும் பங்கேற்று தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com