முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்துக்கான மதுரை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.


தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்துக்கான மதுரை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
இது குறித்து சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ப. முகிலன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில துணைத் தலைவர் ப. முகிலன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மதுரை மாவட்ட சங்கத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவராக பொன்னையா, செயலராக ஜெயச்சந்திரன், பொருளாளராக முருகேசன், மாவட்ட அமைப்புச் செயலராக ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், மகளிரணி தலைவராக ஜான்சிராணி, துணைத் தலைவராக ஜெசிந்தாமேரி, சங்கரி, யோகராணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தும், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், செப்டம்பர் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சங்க மாநில மாநாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் முத்துப்பிள்ளை, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் முருகன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக கோமதி சங்கர், தமிழக தமிழ்ஆசிரியர் கழகம் அழகுமலைக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com