கமுதி பகுதியான வல்லந்தையில் 10 ஏக்கர் பரப்பளவில் கிணற்று பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் அமோக விளைச்சலை அளித்துள்ளது.
இப்பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன் விவசாயிகள் மிளகாய் நடவு செய்தனர். பின்னர் தங்களது கிணறுகளில் ஆழ்துளை அமைத்து அதிலிருந்து கிடைத்த தண்ணீரை பயன்படுத்தி 10 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டனர்.
தற்போது அந்த மிளகாய் கன்றுகள் நன்கு வளர்ந்து காய்கள் காய்த்து நல்ல மகசூலைத் தந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.