திருவரங்கத்தில் நாளை மக்கள் தொடர்புத் திட்ட முகாம்

முதுகுளத்தூர் வட்டம் கீழத்தூவல் உள்வட்டம் திருவரங்கம் ஊராட்சியில் ஏப்.26 ஆம் தேதி (புதன்கிழமை) மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது.

முதுகுளத்தூர் வட்டம் கீழத்தூவல் உள்வட்டம் திருவரங்கம் ஊராட்சியில் ஏப்.26 ஆம் தேதி (புதன்கிழமை) மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
 பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர்  சு.கீ.சமீரன் தலைமையில் முகாம் நடைபெறும். இம்முகாமில் குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ், வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் நேரடியாகவும், மனுக்கள் மூலமும் தெரிவிக்கலாம்.
முதுகுளத்தூர் வட்டாட்சியர் எஸ். ஜெயமணி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com