பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று, மண்டல போட்டிக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.
கமுதி கே.என். அரசு மேல்நிலைப் பள்ளியில், கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், 14 வயதுக்குள்பட்ட பிரிவில் கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்தனர். இறகுப் பந்து இரட்டையர் பிரிவில் எஸ். ஜனார்த்தனன், கே. ஹரீஸ் ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர்.
மேசைப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் எஸ். முகம்மது இர்பான், பி.டி. கமலேஸ் ஆகியோர் இரண்டாமிடமும், மாணவிகள் பிரிவில் சி. யோகதர்சினி இரண்டாமிடமும் பெற்றனர். 17 வயதுக்குள்பட்ட பிரிவில், கேரம் ஒற்றையர் பிரிவில் ஆர். கோபிநாத், மாணவிகள் பிரிவில் மேசைப்பந்து போட்டியில் ஆர். வைஷ்ணவி, ஆர். நித்யஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றனர். 19 வயதுக்குள்பட்ட மாணவர் பிரிவு சதுரங்கப் போட்டியில், எம்.எஸ்.விஷ்ணுகுமார் முதலிடமும், இறகுப்பந்து இரட்டையர் பிரிவில் எஸ். சுமன்வசந்த், எஸ். ஆகாஸ் ரூபன் ஆகியோர் இரண்டாமிடமும் பிடித்தனர்.
வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் டி. சரவணக்குமார், கே. கருப்பையா, கே. வளர்மதி, சி. புவனேஸ்வரி ஆகியோரை பள்ளி கல்விக்குழுத் தலைவர் ஏ.வி. குமாரசாமி, செயலர் எஸ். பாலசுப்பிரமணியன், பொருளாளர் எம். மனோகரன் மற்றும் கல்விக்குழு ஆலோசகர்கள் எம். மணிமாறன், குரு. சண்முகசுந்தரம், பள்ளியின் முதல்வர் பி.சோபனாதேவி ஆகியோர் பாராட்டி கெளரவித்தனர். பள்ளி துணை முதல்வர் ஆர். தனலெட்சுமி நன்றி கூறினார்.