திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சார் நிலைக் கருவூலம், பத்திர பதிவுத் துறை, சிறைத்துறை போன்ற அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் பெய்த மழை காரணமாக தாலுகா அலுவகம் வாயில் முன்பாக மழை நீர் தேங்கியுள்ளது.இதனால் இங்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் குட்டை போல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும்அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.எனவே இது சம்பந்தபட்ட துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.