ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே வெள்ளிக்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
நயினார்கோவில் ஒன்றியம் கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). விவசாயியான இவர் வெளியூர் செல்வதற்காக அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் அவர்மீது மோதியது. இதில் பலத்த காயமுற்ற அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து நயினார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து சரக்கு வாகன ஓட்டுநரான அகரம் கிராமத்தைச் சேர்ந்த பாலுச்சாமி மகன் பஞ்சவர்ணத்தை கைது செய்தனர்.