ராமேசுவரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் படத்திற்கு தமிழ்புலிகள் அமைப்பின் நகரச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் திமுக சார்பில் நகரச் செயலாளர் நாசர்கான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் செந்தில்வேல், தமிழர் தேசிய முன்னணி மாநில பொதுச்செயலாளர் கண்.இளங்கோ, தமிழ் புலிகள் அமைப்பு தொகுதி செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.