ராமநாதபுரம் அருகேயுள்ள புல்லந்தையில், பா.ஜ.க. சார்பில் புதன்கிழமை அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பா.ஜ.க.வின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முரளீதரன் தலைமையில், கட்சி நிர்வாகிகளான மாநில துணைத் தலைவர் து. குப்புராமு, மாவட்டச் செயலர்கள் ஆத்ம. கார்த்திக், முத்துச்சாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், திருவாடானை தொகுதி சட்டப்பேரவைப் பொறுப்பாளர் துரை. கண்ணன், திருப்புல்லாணி ஒன்றியத்தின் தலைவர் காளிதாஸ், நிர்வாகிகள் குமார், காந்தி உள்பட கட்சித் தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.