தனிநபர் கழிப்பறை கட்டுமானப் பணிகள் ஆய்வு

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பறை கட்டுமானப் பணிகளை,  மாவட்ட திட்ட இயக்குநர் தனபதி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பறை கட்டுமானப் பணிகளை,  மாவட்ட திட்ட இயக்குநர் தனபதி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
    முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட உடைகுளம், கீழத்தூவல், வைத்தியனேந்தல், கருங்காலகுறிச்சி, குமாரகுறிச்சி, புளியங்குடி, தேரிருவேலியில் நடைபெற்று வரும் தனிநபர் கழிப்பறைக் கட்டுமானப் பணிகள், கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை பணிகளில் குறைகள் இருப்பின், உடனடியாக களைய வேண்டியன குறித்து ஆய்வு செய்யபட்டு பயனாளிகளுக்கு விளக்கப்பட்டது.     மேலும், கீழத்தூவலில் மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள் குறித்து, மாவட்ட திட்ட இயக்குநர் தனபதி ஆய்வு செய்தார்.    
 தொடர்ந்து, அரசுத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும்,  தனிநபர் கழிப்பறை கட்டுமானப் பணிகளை டிசம்பர் 30-க்குள் கட்டி முடிக்கவும் திட்ட இயக்குநர் உத்தரவிட்டார். ஆய்வில், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராதாகிருஷ்ணன், சாவித்திரி (கிராம ஊராட்சிகள்) பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com