வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், கடந்த 10 நாள்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியவில்லை. இதனால், ரூ. 20 கோடிக்கு மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.
ஒக்கி புயல் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், மாவட்டம் முழுவதிலுமுள்ள 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 4,500-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், 1 லட்சம் மீனவர்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 20 கோடிக்கான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.