கமுதி அரசுமருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவமனைக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் புற நோயாளிகளாகவும், 100க்கும் மேற்பட்டார் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்துக்கு உள்ளேயே மருத்துவ கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் சிகிச்சை பெற வருவோருக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
எனவே மருத்துவக் கழிவுகளை முறையாக சேகரித்து அழிக்க உத்தரவிட வேண்டும் என்றும் நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.