ஜூலை 20 இல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சிறப்பு சேர்க்கை முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியங்களில் சிறப்பு  உறுப்பினர் சேர்க்கை முகாம்,  ஜூலை 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியங்களில் சிறப்பு  உறுப்பினர் சேர்க்கை முகாம்,  ஜூலை 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
      இது குறித்து தொழிலாளர் நல அலுவலர் ஜெ. காளிதாஸ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியங்களில் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் ஜூலை 20 ஆம் தேதி, ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள மதார்ஷா பள்ளி, பெரிய பள்ளிவாசல் தெரு, அலிகார் சாலை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன. இம்முகாமில், இதுவரை பதிவு பெறாத தொழிலாளர்கள் அனைவரும் உறுப்பினர்களாகப் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
     இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். திட்டங்களில் சேர்ந்திருக்கக் கூடாது. உறுப்பினராக சேருவதற்கு பதிவுக் கட்டணம் எதுவும் இல்லை. அரசின் சார்பில் முற்றிலும் இலவசமாகப் பதிவு செய்யப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
    பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர் பணியிடத்தில் ஏற்படும் விபத்தில் மரணமடைந்தால் ரூ. 5 லட்சம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ. 1 லட்சம் விபத்து காப்பீடாகவும் வழங்கப்படுகிறது. பதிவு செய்ய விரும்புவோர், பள்ளி மாற்றுச் சான்றிதழ், குடும்ப அட்டை,  ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களின் நகல்களுடன் முகாமுக்கு வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு பெற்ற உறுப்பினர்களாக இருந்தால், தங்களது ஆதார் எண்ணை நலவாரிய பதிப்பு எண்ணுடன் இணைத்திருப்பதும் அவசியமாகும். ஆதார் எண்ணை ஜூலை 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com