திருவாடானை மத்திய கூட்டுறவு வங்கி எதிர்புறம் சாலையில் தொண்டிக்கு செல்லும் குடிநீர் குழாய் உள்ளது. இந்தக் குழாய் சேதம் அடைந்து தண்ணீர் வீணாவதுடன் சாலையில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி மையமாக மாறியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க படவில்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.