சேதமடைந்த மின்கம்பங்களை  மாற்றக் கோரிக்கை

கமுதி அருகே கீழராமநதியில்  பள்ளி மற்றும் குடியிருப்புகள் நடுவில் உள்ள சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கமுதி அருகே கீழராமநதியில்  பள்ளி மற்றும் குடியிருப்புகள் நடுவில் உள்ள சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 கீழராமநதி கிராமத்தில் பள்ளி மற்றும் முக்கிய தெருக்களில்  உள்ள மின் கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்து ஒடிந்து விழும் நிலையில் உள்ளன.  இதனால் அந்த வழியாக செல்வோர் அச்சத்தில் செல்கின்றனர்.
   இது குறித்து மின் வாரிய அலுவலகத்திற்கு புகார் அளித்தும்  நடவடிக்கை எடுக்கவில்லையாம்.  எனவே பெரும் விபத்து ஏற்படும் முன் மின்வாரிய சேதமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com