பெண்ணுக்கு கத்திக் குத்து: ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு

சத்திரக்குடி ஆட்டோ நிறுத்துமிடத்தில் திங்கள்கிழமை பெண்ணை கத்தியால் குத்திய ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சத்திரக்குடி ஆட்டோ நிறுத்துமிடத்தில் திங்கள்கிழமை பெண்ணை கத்தியால் குத்திய ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 சத்திரக்குடி அருகே உள்ள மென்னந்தி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மனைவி செல்வி. இவர் சத்திரக்குடிக்கு வந்துவிட்டு ஊருக்குச் செல்வதற்காக காத்திருந்துள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான செளந்திரராஜன் மகன் வீரபாண்டி என்பவர் செல்வியை கேலி செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட செல்வியை  வீரபாண்டி கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார். பலத்த காயமுற்ற செல்வி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
  இதுகுறித்து சத்திரக்குடி காவல் நிலையத்தில் செல்வியின் உறவினர் பாண்டி மகன் அஜித்குமார்(25), அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் குணசேகரன் வழக்குப் பதிந்து வீரபாண்டியை தேடி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com