திருவாடானை அருகே கொடுங்குளம் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் விஜய்(22).
இவர் தனது பைக்கில் ஆனந்தூர் செல்லும் போது பனிக்கோட்டை விலக்கு அருகே பைக் மரத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த திருவாடானை போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.