குடியிருப்பு வசதி: அரசு மருத்துவமனை பணியாளர்கள் கோரிக்கை

திருவாடானை அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு குடியிருப்பு வசதி செய்து தர வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிகை விடுத்துள்ளனர்.

திருவாடானை அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு குடியிருப்பு வசதி செய்து தர வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிகை விடுத்துள்ளனர்.
  திருவாடானை அரசு மருத்துவமனை 35 படுக்கைகள் கொண்டது. இதில், 5 மருத்துவர்கள் 10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், 4 அலுவலர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணியாற்றுபவர்களுக்கு குடியிருப்பு வசதி இல்லாததால் பலரும் வெளி ஊர்களில் இருந்து தினமும் பேருந்துகளில் வந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. திருவாடானையிலும் இவர்கள் தங்குவதற்கு போதுமான இடவசதி இல்லை.  பணியாளர்கள் அனைவரும் வெளி ஊர்களில் இருந்து வரவேண்டியிருப்பதால் மருத்துவமனையில் பல்வேறு பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  இது குறித்து சமூக ஆர்வலர் நாகநாதன் கூறுகையில், இந்த மருத்துவமனை ஆரம்பித்த காலத்தில் இருந்து இங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு குடியிருப்பு வசதி செய்து தர வேண்டும் என பல முறை கோரியும் இதுவரை எந்த பயனும் இல்லை.
  இதனால் பணியாளர்களுக்கு அலைச்சலும் காலதாமதமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து மருத்துவமனை பணியாளர்களுக்கு குடியிருப்பு வசதி செய்து தர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com