தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு கூட்டம், திருவாடானையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டம், வழக்குரைஞர் தனபாலன் தலைமையிலும், முனைவர் வா ன்தமிழன் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில், திருவாடானை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க புதிய தலைவராக வழக்குரைஞர் தனபாலன், செயலராக கணேசன், பொருளாளராக ஜோதிபாசு மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், விரைவில் கலை இரவு நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.