தொழிலாளர்களின் ஊதியத்தை குறிப்பிட்ட தேதிக்குள் வழங்க கோரி திங்கள்கிழமை வாலிநோக்கம் உப்பு நிறுவன சி.ஐ.டி.யூ மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சி.ஐ.டி.,யு மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி, தமிழ்நாடு உப்பு நிறுவன தொழிலாளர் தலைவர் கே.பச்சமால், செயலாளர் டி.முருகவேல், பொருளாளர் என்.திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உப்பு நிறுவனதொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி பேசப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட சுமார் 90 பேர் கலந்து கொண்டனர்.