முதுகுளத்தூரில் சீர் மரபினர் நலச்சங்கம் சார்பாக சிறு தொழில் தொடங்க கடன் வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் மயில்மணி பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.கோபிநாதன், இளைஞரணி தலைவர் முத்துராமலிங்கம், நேதாஜி கல்வி அறக்கட்டளை தலைவர் மயில்வாகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முகாமில் முதுகுளத்தூர்,கடலாடி,சாயல்குடி பகுதியில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.