திருவாடானை அருகே கடம்பாகுடி கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து(62). இவர் திங்கள்கிழமை மாலை தொண்டி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்தார். அப்போது பண்ணை வயலைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் பிரதாப் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதி. இதில் காளிமுத்து பலத்த காயம் அடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காளிமுத்து உயிரிழந்தார்.
இது குறித்து திருவாடானை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.