ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை மரக்கன்றுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டது. கட்சியின் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். நகர் தலைவர் கோபி, வர்த்தகப் பிரிவு தலைவர் பாபாசங்கர், சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவாதளத் தலைவர் காருகுடி சேகர், இலக்கிய அணியின் தலைவர் முருகேசன், மகளிர் அணித் தலைவி முனீஸ்வரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.