சாயல்குடியில் பாஜகவினர் மூன்றாண்டு சாதனையை விளக்கும் துண்டு பிரசுரங்களை புதன்கிழமை வழங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நகர் பா.ஜ.க அலுவலகத்தை மாநில துணைத் தலைவர் குப்புராமு திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் ராமசாமி,மாநில விவசாய அணி செயலாளர் முருகவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திறப்பு விழாவில் சாயல்குடி நகர் தலைவர் சத்தியமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு முன்னதாக சாயல்குடி நகர் பகுதியில் கடைகள் மற்றும் பொது மக்களிடம் மத்திய அரசின் மூன்றாண்டு சாதனையை விளக்கும் துண்டு பிரசுரங்களை மாநில துணைத் தலைவர் குப்புராமு தலைமையில் அக்கட்சியினர் வழங்கினர்.