சாயல்குடியில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் ரூ.1.50 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தூத்துக்குடியில் இருந்து சாயல்குடி பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் அதிகாமான உப்பு லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிகமாக லோடுகளை ஏற்றி வந்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டன. இந்நிலையில் பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.
அப்போது 20-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் அளவுக்கு அதிமான பாரங்களை ஏற்றியவாறு விதிமுறைகள் மீறி வந்தன. இதையடுத்து அந்த வாகன ஓட்டிகளிடம் ரூ.1.50 லட்சம் அபராத தொகையாக பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் வசூலித்தார்.