திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
பின்னர் ஆரெத்தினேஸ்வருக்கும் சினேகவல்லி அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.