பள்ளிகளில் யோகா தினம்

கடலாடி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் சர்வதேச யோக தினம் புதன்கிழமை நடைபெற்றது.

கடலாடி அரசு நடுநிலைப் பள்ளியில் யோகா தினம்
கடலாடி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் சர்வதேச யோக தினம் புதன்கிழமை நடைபெற்றது.
  கடலாடி அரசு நடுநிலைப்பள்ளி  மாணவர்கள் சார்பாக  நடைபெற்ற சர்வதேச யோக தினத்திற்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் பாண்டீஸ்வரி தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை சற்பிரசாதமேரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.முருகன், வருவாய் ஆய்வாளர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவா பாரதி அமைப்பாளர் டி.எம்.ராஜசேகர் மாணவர்களுக்கு யோக பயிற்சி அளித்தார். யோகா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் ராமசாமி,மரிய எட்வின்,வீரக்குமார்,ஷகிலாபானு ஆகியோர் செய்திருந்தார்.

முதுகுளத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் யோகா தினம்
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை மாணவர்கள் சார்பில் சர்வதேச யோக தின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
 இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ)முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் துரைப்பாண்டியன்,தேசிய பசுமை படை மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர்  மங்களநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.சி.சி திட்ட அலுவலர் சிவக்குமார் மாணவர்களுக்கு யோக பயிற்சி அளித்தார். யோகா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் விஜயலெட்சுமி, அருள்தாஸ், ரஜியாபானு ஆகியோர் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com