ஆர்.எஸ். மங்கலம் பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பறையை பராமரிக்க வலியுறுத்தல்

திருவாடானை அருகே உள்ள ஆர்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பறையை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருவாடானை அருகே உள்ள ஆர்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பறையை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 இந்த பேருந்து நிலையத்தில் திருச்சி, ராமேசுவரம், பரமக்குடி, தொண்டி, இளையான்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வந்து செல்கின்றன. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்காண பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள ஒரே ஒரு கட்டணக் கழிப்பறையும் பராமரிக்கப்படாமல் சுகாதாரமற்று காணப்படுகிறது.
இங்கு துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். மேலும் இது ஈக்கள் உற்பத்தி மையமாகவும் உள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இந்த கட்டண கழிப்பறையில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com